புனேவில் உள்ள ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது!: சீரம் நிறுவனம்

புனே: புனேவில் உள்ள ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. தீ விபத்தால் எதிர்காலத்தில் பிசிஜி, ரோட்டா தடுப்பூசிகள் உற்பத்தி பாதிக்கும் எனவும் சீரம் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததாகவும், கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பிற்கு பாதிப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: