சென்னை: இங்கிலாந்து 4 டெஸ்ட் போட்டி, 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் மற்றும் 2வது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் பிப். 5ம் தேதி தொடங்க உள்ளது. கொரோனா பரவல் காரணமாக மைதானத்தில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் போட்டியின் போது ரசிகர்களுக்கு அனுமதி இல்லையென்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியம் 50 சதவீத பார்வையாளர்களுடன் டெஸ்ட் போட்டியை நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதற்கும் தமிழக அரசும் அனுமதி அளித்திருந்தது.