குன்னூர் : குன்னூர் அருகே உள்ள கிளண்டேல் பகுதியில் கரடியின் தொல்லையால் ரேஷன் கடை பூட்டப்பட்டது.நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கரடிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக குன்னூரில் தேயிலை, தோட்டம் மற்றும் குடியிருப்புகளில் உணவுகளை தேடி உலா வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிளண்டேல் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு வரும் கரடி கதவுகளை உடைத்து உள்ளே சென்று அங்குள்ள அரிசி, பருப்பு, சர்க்கரையை உண்டு செல்வதால் கடை பூட்டப்பட்டுள்ளது.