ஜெயங்கொண்டம் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் மீன்சுருட்டி அருகே உள்ள ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் நடைபெறும் ஆட்டு சந்தைக்காக, கங்கைகொண்ட சோழபுரம் ஊராட்சியின் சார்பில் சேவை மைய வளாகத்தில் ஆட்டு சந்தை ஏலம் நடைபெற்றது.ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி தலைமையில்,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மேரி ஏலத்தை துவக்கி வைத்தார்.
ஏலம் எடுக்க அந்த கிராமத்தில் உள்ள 14 பேர் டெபாசிட் தொகை ரூ 2 லட்சத்திற்கான காசோலையை கொடுத்தனர்.