கோவை : தொற்று இல்லாத நோய்கள் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ராம் ரத்தன் மற்றும் சஞ்சய் குமார் ஆகிய 2 கடற்படை அதிகாரிகள் ‘கே2கே ரன் 2021’ எனும் விழிப்புணர்வு ஓட்டத்தை துவக்கி உள்ளனர். இந்த ஓட்டத்தை இவர்கள் தேசிய இளைஞர் தினமான ஜனவரி மாதம் 12ம் தேதி கன்னியாகுமரியில் துவங்கினர்.