கொரோனா எதிரொலி!: சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து..!!

சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்க்கும் வகையில், குடியரசு தின விழாவை நேரில் காண வருவதை தவிர்க்குமாறும், தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மாவட்டம் தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் உரிய மரியாதை அளிக்கவும் அரசு அறிவுத்தியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் ஜனவரி 26ம் தேதி காலை 8 மணிக்கு ஆளுநர் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார்.

Related Stories: