மங்களூரு: துபாயில் இருந்து விமானத்தில் வந்த பயணி ஒருவர் தனது ஆசன வாயில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்ததை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம், மடிக்கேரியை சேர்ந்தவர் உபயத் பலியாத், துபாய் சென்றிருந்த அவர் நேற்று காலை ஏர் இந்தியா விமானத்தில் துபாயில் இருந்து மங்களூரு பஜ்பே விமான நிலையம் வந்தார். சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.