சென்னை: தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அரசு படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து 20ம் தேதி மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரிகளை திறக்க அரசு முடிவு எடுத்தது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரிகள் திறக்கும் அட்டவணையை நேற்று வெளியிட்டது. இதன்படி, பொறியியல் 2 மற்றும் 3ம் ஆண்டு வகுப்புகள் பிப்ரவரி 18ம் தேதி தொடங்கும். மே மாதம் 21ம் தேதி இறுதி வேலை நாளாக இருக்கும்.