கூடுவாஞ்சேரி: நண்பரின் பிறந்தநாள் விழாவில், கிணற்றின் மூழ்கி மண் எடுக்காமல் வராமல் வரமாட்டேன் என கூறி பந்தயம் கட்டி குதித்த வாலிபர், பரிதாபமாக பலியானார். சென்னை கேகே நகர் அடுத்த எம்ஜிஆர் நகர், நக்கீரன் தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மகன் பிரின்ஸ் (40). அங்குள்ள தனியார் கம்பெனியில் அட்மினாக பணியாற்றி வந்தார். இவரது நண்பர், கூடுவாஞ்சேரி அடுத்த பெரிய அருங்கால் கிராமத்தை சேர்ந்த மோசஸ். இந்நிலையில், நேற்று முன்தினம் மோசஸ் பிறந்தநாள் கொண்டாடினார். அதில், அவரது உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோருடன், பிரின்ஸ் உள்பட ஏராளமான நண்பர்களும் கலந்து கொண்டு, கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர், நண்பர்கள் அனைவரும் மது அருந்தினர். இதில், மோசஸ் வீட்டின் தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் 20க்கும் மேற்பட்டோர், போதையில் குதித்து விளையாடினர். அப்போது, பிரின்ஸ் கிணற்றின் ஆழத்தில் உள்ள சேற்று மண்ணை எடுத்து வருவதாக தனது நண்பர்களிடம் பந்தயம் கட்டினார்.