பீஜிங்: அருணாச்சலில் வீடு கட்டிய விவகாரத்தில், ‘எங்கள் எல்லைக்குள் வீடு கட்டுவது சாதாரணமானது,’ என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அருணாச்சல் பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள சாரி சூ ஆற்றங்கரை அருகே 101 வீடுகளுடன் சீனா புதிய கிராமத்தை உருவாக்கி இருக்கிறது. இதன் செயற்கைக்கோள் புகைப்படங்களை பிளானட் லேப் என்ற நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, கடந்த 2019 ஆகஸ்ட்டில் காலியாக இருந்த இடத்தில், 2020 நவம்பரில் எடுத்த செயற்கைக்கோள் புகைப்படங்களில் சீனா வீடு கட்டியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.