உலான்பாதர்: மங்கோலியாவில் கொரோனா நோயாளிகளை கையாளுவதில் ஏற்பட்ட குளறுபடியால் போராட்டம் வெடித்த நிலையில், அந்நாட்டு பிரதமர், துணை பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜினாமா செய்தனர். மங்கோலியாவில் கொரோனா பாதித்த பெண் பச்சிளம் குழந்தையுடன் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தப்படும் வீடியோ வெளியானது. வீடியோ வெளியானதை அடுத்து நேற்று மங்கோலியாவில் அரசை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.