கொழும்பு: புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இலங்கை அரசு விசாரணை குழு அமைத்தது. அதிபர் கோட்டாபய ராஜபக்ச உத்தரவுப்படி ஒரு குழுவும், கடற்தொழில் அமைச்சகத்தின் கீழ் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மீனவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யாமல் இந்தியாவிடம் ஒப்படைக்கவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.