தமிழகத்தில் மேலும் 596 பேருக்கு கொரோனா; 09 பேர் பலி: மொத்த பாதிப்பு 8.33 லட்சமாக அதிகரிப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.!!!

சென்னை: தமிழகத்தில் மேலும் 596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை (8,33,011) 8 லட்சத்து 33 ஆயிரத்து 011 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்,  தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  

* தமிழகத்தில் மேலும் 596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,33,011 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 705 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதன் மூலம் மொத்தம் 8,15,516 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

* இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,299 ஆக உயர்ந்துள்ளது.

* அரசு மருத்துவமனையில் 3; தனியார் மருத்துவமனையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 166 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* சென்னையில் மொத்தம் 229705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 1,54,52,541 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* இன்று மட்டும் 61,023 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் தற்போது 5,196 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,03,513 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 366 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,29,464 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 230 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 34 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு  திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 252 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* அரசு மையங்கள் 68; தனியார் மையங்கள் 184.

* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 4 யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

* மேற்கு வங்கம்-3

* உத்திரப்பிரதேசம்- 1

* வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

Related Stories: