நாங்குநேரியில்: நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே இறைப்புவாரி ஊராட்சி உள்ளது. இங்கு காரியாகுளம் பகுதியில் இருந்து தெற்கு காரியாகுளம் செல்லும் வழியில் நம்பியாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம், கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டது இதனால் சுப்பிரமணியபுரம் வடக்கு, தெற்கு, காரியா குளம், தாமரைகுளம், பாண்டிச்சேரி சீயோன் மலை, கல்மாணிக்கபுரம், சித்தூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் போக்குவரத்து வசதியின்றி துண்டிக்கப்பட்டுள்ளன.