மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வை மேலும் ஒருவாரம் நீட்டிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு..!!

டெல்லி: காலியாக உள்ள மருத்துவ மேற்படிப்பு இடங்களை நிரப்ப கலந்தாய்வை மேலும் ஒருவாரம் நடத்த அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருக்கிறது. மருத்துவ மேற்படிப்பில் அரசு கல்லூரிகளில் 5 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 112 இடங்களும் காலியாக இருக்கின்றன என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. மெடிக்கல், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் என்பது இன்னும் நிரப்பப்படாமல் காலியாகவே இருக்கிறது.

குறிப்பாக அரசு கல்லூரிகளில் 5 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 112 இடங்களும் என மொத்தம் 117 இடங்கள் காலியாக உள்ளது. பி.டி.எஸ். என்று சொல்லக்கூடிய பல் மருத்துவத்தை பொறுத்தவரை அரசு மருத்துவமனைகளில் 12 இடங்களும், தனியார் மருத்துவமனைகளில் 447 இடங்களும் காலியாக இருக்கிறது. இதனை நிரப்ப காலஅவகாசம் தேவைப்படுகிறது. எனவே மேலும் ஒருவாரம் மீண்டும் கலந்தாய்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

நேற்று மாலை அவசர வழக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கக்கூடிய நிலையில், உடனடியாக இந்த வழக்கை விசாரணைக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 15ம் தேதியுடன் மருத்துவ கலந்தாய்வு நிறைவடைந்துவிட்ட நிலையில், ஏராளமான மருத்துவ இடங்கள் காலியாக உள்ளது. இந்நிலையில், மாணவர்கள் பலனடைய வேண்டி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

Related Stories: