டெல்லி: இந்தியாவில் 2-ம் கட்டமாக தடுப்பூசி செலுத்தும் போது பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 50 வயதிற்கு மேற்பட்ட எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மாநில முதல்வர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அனைத்து மாநிலங்களிலும் ஒத்திகை பணிகள் தற்போது நடைபெற்றது. பின்பு அனைத்து மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.