பெங்களூரு: சசிகலாவுக்கு RT-PCR-ல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை என தகவல் கூறப்பட்டுள்ளது. முன்னதாக RAPID பரிசோதனையில் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என கண்டறிப்பட்டது. ஆக்சிஜன் உதவியுடன் பெங்களூரு அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையளிக்கப்படுகிறது என மருத்துவர் மனோஜ் கூறினார். சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது எனவும், தொடர்ந்து மருத்துவ சிகிச்கைகள் தேவைப்படுவதாகவும் மனோஜ் தகவல் கூறினார். சசிகலா அனுமதிக்கப்பட்டுள்ள பவ்ரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 27-ல் விடுதலையாகவிருந்த நிலையில் சசிகலா உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது என அவரது தம்பி திவாகரன் கூறினார். சசிகலாவுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ள நிலையில் சிறையில் சரியான சிகிச்சை தரவில்லை என திவாகரன் குற்றம் சாட்டினார்.