பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அ.தி.மு.க. பிரமுகர்கள் 3 பேருக்கு ஆண்மை பரிசோதனை

கோவை, ஜன.21: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அ.தி.மு.க. பிரமுகர்கள் 3 பேருக்கு ஆண்மை பரிேசாதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் திருநாவுக்கரசு, சபரிராஜன், மணிவண்ணன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். 2 ஆண்டிற்கு பிறகு இந்த வழக்கில் சி.பி.ஐ. போலீசார் பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் அருளானந்தம் (34), முன்னாள் அ.தி.மு.க பொள்ளாச்சி நகர மாணவரணி இணை செயலாளர் ஹெரன்பால் (28), அ.தி.மு.க. உறுப்பினர் பாபு (29) ஆகியோரை கடந்த 5ம் தேதி கைது செய்தனர்.

இவர்கள் கோபி சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ஹெரன்பாலை சி.பி.ஐ. போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையின்போது பல்வேறு முக்கிய தகவல்களை போலீசார் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 3 பேரின் 15 நாள் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதைத் ெதாடர்ந்து 3 பேரும், கோவை மகிளா கோர்ட்டில் நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, வரும் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து கோபி சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக 3 பேருக்கும் ஆண்மை பரிசோதனை நடத்த அனுமதிக்கவேண்டும் என சி.பி.ஐ. சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டு பரிசோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. விரைவில் இவர்களுக்கு அரசு மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

Related Stories: