சேந்தமங்கலம்: எருமப்பட்டி அருகே, விளை நிலங்களில் மின் கோபுரம் அமைத்ததில், உரிய இழப்பீடு கேட்டு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் வரகூர் ஊராட்சி மூலக்காட்டில் உள்ள விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைத்து மின்சாரம் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. இதற்கு அரசு நிர்ணயித்த இழப்பீடு வழங்கவில்லை என உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், கோபுரங்கள் அமைக்கப்பட்ட வயல் வெளிகளில் 6 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.