புதுச்சேரி மக்களுக்கு கிரண்பேடி நன்மை செய்வதாக நினைத்தால், அவர் புதுச்சேரியை விட்டு காலி செய்து கொண்டு கிளம்ப வேண்டும். :- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
இந்தியாவிலேயே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று நாங்கள் சொல்லவில்லை. தேசிய குற்றவியல் ஆவண
காப்பகம் சொல்கிறது. :- சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாபாகிஸ்தான் மீது கொலைவெறி கோபம் காட்டுகிற இந்தியா, தமிழக மீனவர்களை கொன்று குவிக்கிற இலங்கை சிங்கள இனவெறி அரசை அரவணைத்து முதுகில் தட்டிக்கொடுக்கிறது. :- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. மத்திய அரசு கண்டுகொள்ளாததுதான் இதற்கு முக்கிய காரணம். :- பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி