சாம்ராஜ்நகர்: மத்திய-மாநில அரசின் ஜல ஜீவன் திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு அமைக்கப்படும் என்று மாவட்ட பஞ்சாயத்துராஜ் துறை தலைமை அதிகாரி அசல்போயர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``மத்திய-மாநில அரசுகள் இணைந்து ஜல ஜீவன் திட்டத்தின் மூலம் அனைவருக்கும் குடிநீர் வசதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக பகுகிராம குடிநீர் திட்டத்தின் கீழ் கபினியிலிருந்து நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பி அதை பொதுமக்களின் வீடுகளுக்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.