புதுடெல்லி: தீயிட்டு வீட்டை எரித்ததாக தொடரப்பட்ட வடகிழக்கு டெல்லி கலவர வழக்கில், 2 பேருக்கு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். வடகிழக்கு டெல்லியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அரங்கேறிய வன்முறைகளில் 53 பேர் பலி, 300 பேர் காயம், கோடிக்கணக்கில் பொருள் சேதம் ஏற்பட்டது. அது தொடர்பாக 700க்கும் அதிக வழக்குகளில் 1,700க்கும் அதிகமான நபர்கள் விசாரணை கைதிகளாக மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். அதில் ஜாப்ராபாத் பகுதியில் வீட்டை தீயிட்டு சாம்பல் ஆக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட சிலர், ஜாமின் கோரி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.