கேபிள் டிவி ஆபரேட்டர் கொலையில் 9 பேர் கைது

குன்றத்தூர்: முகலிவாக்கத்தை சேர்ந்தவர் பொன்னுரங்கம் (55). கேபிள் டிவி ஆபரேட்டர். நேற்று முன்தினம் தனது மகன் தானேஷ்வரனுடன் பைக்கில் மதனந்தபுரம் அருகே சென்றபோது, ஆட்டோவில் வந்த மர்மநபர்கள், அவரை வெட்டிக் கொலை செய்தனர். தானேஷ்வரன் படுகாயத்துடன்  சிகிச்சை பெறுகிறார். புகாரின்படி மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூந்தமல்லியை சேர்ந்த யாசிம் (45), சதாம்உசேன் (25), உமர்பாஷா (31), காதர்பாஷா (48), விக்னேஷ்வரன் (23), முனுசாமி (20),  காலா (23), சுரேஷ் (24), அனீபா (28) ஆகியோரை நேற்று கைது செய்தனர். விசாரணையில், நிலத் தகராறு காரணமாக கொலை செய்தது தெரிந்தது.

Related Stories: