சென்னை: வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்): புதுக்கோட்டை தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற மெசியா (30), நாகராஜ் (52), சாம் (28), செந்தில்குமார் (32) ஆகியோர் சென்றனர். அப்போது இலங்கைக் கடற்படையின் 2 படகுகள் சீறிப் பாய்ந்து வந்து, மேற்கண்ட படகு மீது முட்டி மோதின. படகு மூழ்கத் தொடங்கி விட்டது. இதுவரை கரைக்கு வந்து சேரவில்லை. நம்பிக்கை அளிக்கின்ற எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
அன்புமணி (பாமக இளைஞரணி தலைவர்): சிங்களப்படையினரின் தாக்குதலில் தமிழக மீனவர்களின் படகு கவிழ்ந்து, அதிலிருந்த 4 மீனவர்கள் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலும், தாக்குதலும் கண்டிக்கத்தக்கவையாகும்.