சென்னை: தமிழகத்திற்கு 2வது கட்டமாக, 5.8 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணி கடந்த 16ம் தேதி துவங்கப்பட்டது. தமிழகத்திற்கு முதல் கட்டமாக 5.36 லட்சம் டோஸ் கோவிஷீல்டு, 20 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசியை மத்திய அரசு அனுப்பியது. இதன் மூலம் தமிழகத்தில் 166 மையங்களில் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக, 5.08 லட்சம் டோஸ், கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசு நேற்று அனுப்பியது. விமானம் வாயிலாக சென்னை வந்த தடுப்பு மருந்து, தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: