சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான முதலாமாண்டு வகுப்புகள் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் துவங்குவது குறித்து அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் முதல்வருக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், மாணவர்களுக்கான அறிமுக வகுப்பு 20ம் தேதி தொடங்க வேண்டும். முறையான வகுப்புகள் பிப்ரவரி 2ம் தேதியில் தொடங்கலாம். மாணவர்களுக்கு கொரோனோ தொற்றை கண்டறியும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மற்றும் இதர மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டும். ஆள்மாறாட்டத்தை தடுக்க அனைத்து மாணவர்களின் கல்வி, சாதி உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் சரிப்பார்க்க வேண்டும். மாணவர்களின் பெருவிரல் ரேகை, விழித்திரையை பதிவு செய்ய வேண்டும். மாணவர்களின் சமீபத்திய புகைப்படத்தை பெற வேண்டும்.