×

தாய் குறித்து தவறாக பேசியதால் ஆத்திரம் டீ மாஸ்டரின் கண்கள் தோண்டி எடுப்பு: போதை நண்பர் கைது: மெரினாவில் கொடூர சம்பவம்

சென்னை: தாய் குறித்து தவறாக பேசியதால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி, தனது நண்பரான டீ மாஸ்டரின் இரண்டு கண்களையும் மது பாட்டிலால் தோண்டி எடுத்தார். இதனால் அவரது கண்கள் பலத்த சேதம் அடைந்தது. மதுபோதையில் இருந்த ஆசாமியை பொதுமக்கள்  பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தென்காசி மாவட்டம் நீலிதநல்லூர் பலபத்திரராமபுரத்தை சேர்ந்தவர் அசோக சக்கரவர்த்தி(29). டீ மாஸ்டரான இவர் திருவான்மியூரில் உள்ள டீக்கடை ஒன்றில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது நண்பரான அதே ஊரை சேர்ந்த பெரியபாண்டியன்(26) என்பவரும் தேனாம்பேட்டையில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக உள்ளார். இவருவரும் அடிக்கடி மெரினாவில் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் இருவரும் மெரினா கடற்கரை மணலில் மது அருந்தும்போது, பெரியபாண்டியன் அம்மா குறித்து தவறாக பேசி அவரது சேலையை பிடித்து இழுப்பேன் என்று அசோகசக்கரவர்த்தி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதில் அசோகசக்கரவர்த்தி, பெரியபாண்டியனை அடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது தாய் குறித்து தவறாக பேசிய நண்பனை கொலை செய்யும் நோக்கில் திட்டமிட்டு மீண்டும் பெரியபாண்டியன் மது குடிக்க ேநற்று முன்தினம் இரவு அசோக சக்கரவர்த்தியை மெரினா கடற்கரைக்கு அழைத்து வந்துள்ளார். இருவரும் ராணிமேரி கல்லூரி எதிரே உள்ள கடற்கரையில் அமர்ந்து ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, பெரியபாண்டியன் எனது தாய் குறித்து தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் மீண்டும் இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெரியபாண்டியன் மது பாட்டிலை உடைத்து, கொலை செய்யும் நோக்கில் அசோக சக்கரவர்த்தியின் கழுத்தில் ஓங்கி குத்தியுள்ளார். அப்போதும் ஆத்திரம் தீராக அவர், கீழே தள்ளி மார்பில் அமர்ந்து கொண்டு அசோக் சக்கரவர்த்தியின் இரண்டு கண்களையும் பாட்டிலால் குத்தி சேதப்படுத்தியுள்ளார்.

மேலும், அருகில் கிடந்த பிளாஸ்டிக் குச்சியால் இரண்டு கண்களையும் நோண்டியுள்ளார். அசோக சக்கரவர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு மெரினா கடற்கரையில் தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். அப்போது பெரியபாண்டியன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே பொதுமக்கள் பிடித்து சரமாரியாக உதைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மெரினா போலீசாரிடம் பொதுமக்கள் பெரியபாண்டியனை ஒப்படைத்தனர். இரு கண்களிலும் ரத்த கொட்டிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அசோகசக்கரவத்தியை போலீசார் மீட்டு மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை ெபற்று வருகிறார். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து போதையில் இருந்த பெரியபாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மெரினாவில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Tea master ,Drug friend , Tea master's eyes dug for rage over mother: Drug friend arrested: Marina atrocity
× RELATED வேலையைவிட்டு போ என்று கூறியதால்...