மொழிப்போர் தியாகிகளுக்கு ஜன.25ல் வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது என திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனவரி 25ல் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அதன்படி திருவொற்றியூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆலந்தூர் பொதுச்செயலாளர் துரைமுருகன், கும்பகோணம்- பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, திருச்சி- முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு எம்எல்ஏ, தாம்பரம்- தயாநிதிமாறன் எம்பி, செங்கல்பட்டு - இள.புகழேந்தி, பொன்னேரி- கவிஞர் மனுஷ்யபுத்திரன், கும்மிடிப்பூண்டி-புலவர் இந்திரகுமாரி, காஞ்சிபுரம்- வி.பி. கலைராஜன் என தமிழகம் முழுவதும் நடக்கும் பொதுக்கூட்டங்களில் முக்கிய நிர்வாகிகள் பலர் பேசுகின்றனர்.

Related Stories: