கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே பயிர்களை சேதப்படுத்தும் படை குருவிகளை விரட்ட தானாக ஓசை எழுப்பும் கருவியை வாலிபர் தயாரித்துள்ளார். கோவில்பட்டி அருகே துரைச்சாமிபுரத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் மானாவாரி பயிர்களான உளுந்து, பாசி, மக்காச்சோளம், கம்பு, வெங்காயம், மிளகாய் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான படை குருவிகள் இங்கு பயிரிடப்பட்டுள்ள வெள்ளை சோளம், கம்பு பயிர்களின் கதிர்களை தின்று நாசம் செய்கிறது. இதனை தவிர்க்க தகரம் தட்டியும், பட்டாசுகளை வெடித்தும் குருவிகளை விரட்டுகின்றனர்.