மதுரை: மதுரையில் பெய்த மழை எதிரொலியாக, இன்று காலை தரைத்தளம் மற்றும் 3 மாடிகளைக் கொண்ட வீடு மண்ணுக்குள் புதைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை தெற்கு வெளிவீதி பகுதியில் மீனாட்சி டாக்கீஸ் அருகே ஒரு வீடு இன்று காலை திடீரென மண்ணுக்குள் புதைந்து, அருகாமை வீட்டின் மீது சாயந்தது. இங்கு வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியில் ஓடி உயிர் தப்பினர். ஒருவருக்கு மட்டும் கை முறிந்து காயம் ஏற்பட்டது. தகவலறிந்து நகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். இது குறித்து தீயணைப்பு அதிகாரிகள் கூறுகையில்,‘‘மீனாட்சிபள்ளம் என்ற இந்த தாழ்வான பகுதியில் எப்போதும் தண்ணீர் தேங்கும்.