சென்னை: தமிழகத்தில் மேலும் 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை (8,32,415) 8 லட்சத்து 32 ஆயிரத்து 415 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,
* தமிழகத்தில் மேலும் 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.* இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,32,415 ஆக அதிகரித்துள்ளது.
* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 713 பேர் குணமடைந்துள்ளனர்.* இதன் மூலம் மொத்தம் 8,14,811 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.* இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,290 ஆக உயர்ந்துள்ளது.* அரசு மருத்துவமனையில் 3; தனியார் மருத்துவமனையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.* சென்னையில் இன்று ஒரே நாளில் 150 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.* சென்னையில் மொத்தம் 229537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை 1,53,91,518 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.* இன்று மட்டும் 60,249 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.* தமிழகத்தில் தற்போது 5,314 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,03,147 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 336 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,29,234 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 213 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 34 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 252 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.* அரசு மையங்கள் 68; தனியார் மையங்கள் 184.* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 7 யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.* மேற்கு வங்கம்-5* ஆந்திரா-1.* டெல்லி-1* வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.