புதுச்சேரி: வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதின் விளைவாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உடனடியாக 17 கோப்புகளில் கையெப்பம் இட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநில வளர்ச்சி திட்டங்களை முடக்கியும், அமைச்சர்கள் அனுப்பும் நூற்றுக்கு மேற்பட்ட கோப்புகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நிராகரித்தும் வருவதாக குற்றம்சாட்டினார். கடந்த 10 நாட்களாக தானும், அமைச்சர்களும் போராட்டம் நடத்தியத்தின் விளைவாக தற்போது 17 கோப்புகளில் கிரண்பேடி கையெழுத்து இட்டதாக நாராயணசாமி சுட்டிக்காட்டியுள்ளார். கிரண்பேடி தன்னை திருத்திக் கொள்ளாமல் ஆணவப்போக்கோடும், ஜனநாயகத்திற்கு எதிராகவும் தொடர்ந்து செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.