கோவிஷீல்ட் தடுப்பூசி அளித்த பிரதமர் மோடி மாலத்தீவு ஜனாதிபதி நன்றி

மாலத்தீவு: 1,00,000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி அளித்த பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ் நன்றி தெரிவித்துள்ளார். கோவிஷீல்ட் தடுப்பூசியை பெற்ற கொண்ட பின் பேட்டியளித்த மாலத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ், 100,000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசியை மாலத்தீவு பெறுவதில் மகிழ்ச்சி. இந்தியாவில் இருந்து தடுப்பூசிகளைப் பெற்ற முதல் நாடுகளில் மாலத்தீவு ஒன்றாகும். எப்போதும்போல, எந்தவொரு நெருக்கடியிலும் முதல்நபராக பதிலளிப்பவராக இந்தியா எங்கள் பக்கத்திலேயே வலுவாகவும் உறுதியுடனும் நிற்கிறது.

இந்த தாராளமான பரிசுக்கு பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசு மற்றும் இந்திய மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி என மாலத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ் தெரிவித்தார்.

Related Stories: