ஜம்மு: ஜம்மு எல்லையில் ஊடுருவிய 3 தீவிரவாதிகள் நேற்றிரவு பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் நேற்று மாலை எல்லைக் கட்டுப்பாட்டு கோடான அக்னூர் கோர் பகுதியில் ஊடுருவல்கள் இருந்தன. இதையறிந்த இந்திய பாதுகாப்பு வீரர்கள், பாகிஸ்தான் ஆதரவில் ஊடுருவிய தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இருதரப்பிலும் ேநற்று மாலை முதல் நள்ளிரவு வரை தாக்குதல்கள் தொடர்ந்தன. இந்நிலையில், இந்திய பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்திய தரப்பில் 4 வீரர்கள் காயமடைந்தனர்.