சென்னை: மழை நீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க சிறப்பு கவனம் செலுத்தி நிபுணர் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மழை நீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி சென்னை வழக்கறிஞர் சுரேந்திரநாத் கார்த்திக் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 4 வாரத்தில் நிபுணர் குழுவை அமைத்து உரிய பரிந்துரைகளை வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.