மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தகவல்

சென்னை: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். பரிசோதனையின் முடிவில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் அதற்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். 10 மாதங்களுக்கு பின் தமிழகம் முழுவதும் 10,12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: