சென்னை: நில ஆக்கிரமிப்புகள் தொடர்பான தனி நபர் புகார்களை பொது நல வழக்காக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்க வேண்டும் என்றும் அந்த புகார்களை சட்டப்படி பரிசீலித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரலாம் எனவும், பொது நல வழக்காக தொடர முடியாது எனவும் தெளிவுபடுத்தினர். அரசு நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசு நிலம் ஆக்கிரமிப்புக்கு அனுமதிக்க முடியாது என தெளிவுபடுத்தினர்.