டெல்லி: டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க கோரிய மத்திய அரசின் இடைக்கால மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஒரு போராட்டத்தை நடத்த அல்லது தடுத்து நிறுத்த முடிவு எடுக்க வேண்டிய அதிகாரிகளே நீதிமன்றத்தை நாடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. போராட்டத்தை நடத்த அனுமதிப்பது, அனுமதி மறுப்பதும் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் டெல்லி காவல்துறையின் பொறுப்பு எனக்கூறிய உச்சநீதிமன்றம், மனுவை திரும்ப பெற அனுமதி அளித்துள்ளது.