சென்னை: தமிழகத்தில் இதுவரை 25,908 பேருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் சுகாதாரத்துறை அலுவலக வளாகத்தில் தடுப்பூசி மருந்து குளிர்பதன சேமிப்பு கிடங்கை ஆய்வு செய்த பின் அவர் பேட்டி அளித்துள்ளார். இதுவரை தமிழகத்தில் 10.65 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளதாக விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.