சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்படுகிறார். அவர் விடுதலைக்கு முன் சிறையில் சந்தித்து பேச வேண்டும் என்ற முயற்சியில் வக்கீல்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அபராத தொகையை அவர்கள் செலுத்தினர். இந்நிலையில் சசிகலாவின் தண்டனை காலம் வரும் 27ம் தேதியுடன் முடிவதால், அவரை அன்று விடுதலை செய்வதாக கர்நாடக சிறை துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அவர் விடுதலைக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே பாக்கியுள்ளதால், விடுதலைக்கு முன் சிறையில் சந்தித்து பேசிவிட வேண்டும் என்பதில் அவரது வக்கீல்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் விருப்பமாக உள்ளனர்.