சென்னை: தமிழக அரசு அலுவலகங்களில், மகாத்மா காந்தி, நேரு, திருவள்ளுவர், அண்ணா, ராஜாஜி, பெரியார் படங்களுடன், குடியரசு தலைவர் மற்றும் பிரதமரின் படங்களை வைக்க கூறி, 1978ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அரசு அரசாணை பிறப்பித்தும், பெரும்பாலான அரசு அலுவலகங்களில், குடியரசு தலைவர், பிரதமர் படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு அலுவலகங்களில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் படங்களை வைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.