புதுடெல்லி: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளான ஜனவரி 23ம் தேதி, முதலாமாண்டு பராக்கிரம தினமாக கடைபிடிக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். நேதாஜியின் 125வது பிறந்தநாள் நினைவாக கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலக வளாகத்தில் கண்காட்சி நடைபெற உள்ளது.