சென்னை: தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிக்கை பிப்ரவரியில் வெளியாக வாய்ப்பு உள்ளது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும் தேதியே வேட்புமனுத் தாக்கல் தொடங்கிவிடும். பிப்ரவரியில் அறிவிக்கை வெளியானால் மார்ச் மாத இறுதிக்குள் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் நான்கைந்து கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்பதால் ஏப்ரலில் நிறைவுபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.