அரியலூர் : அரியலூர் மாவட்டம் செந்துறை-ஜெயங்கொண்டம் சாலையில் நேற்று அதிக வேகத்துடன் கனரக வாகனங்கள் செல்வதை கண்டித்து இளைஞர்கள் ஒன்றிணைந்து வாகனங்களை மறித்தனர்.மாவட்ட நிர்வாகம் அறிவித்த நேரம் மட்டும் செல்ல வேண்டும், மீறி நகருக்குள் செல்ல கூடாது என வாகன ஓட்டிகளிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்து வந்த செந்துறை போலீசார் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாகனத்தை மீட்டு அதிவேகத்தில் வாகனங்களை இயக்க கூடாது. அனுமதிப்பட்ட வேகத்தில் இயக்குமாறு வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.