பழநி : கோயில் நகரான பழநியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகளவு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதன்படி நகராட்சி ஆணையர் லட்சுமணன் உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் (பொ) வேல்முருகன் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் காந்தி மார்க்கெட், ராஜாஜி சாலை, சுப்பிரமணியுரம் சாலைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். 80க்கும் மேற்பட்ட கடைகளில் நடந்த சோதனைகளில் சுமார் 150 கிலோ அளவிலான தடை பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.