மதுரை: கொரோனா தொற்று காலத்தில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம், பேரணி நடத்த தடை விதிக்க முடியாது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. அரசியல் கட்சியினர் பிரச்சார கூட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடையில்லை என மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு போதிய கவனம் செலுத்தி வருவதால் நீதிமன்றம் புதிதாக உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் கூறியுள்ளது.