சென்னை: நடிகர் விஜய்யின் மாஸ்டர் படக்காட்சிகள் லீக்கானது தொடர்பாக ரூ.25 கோடி கேட்டு தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஜனவரி 13-ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் முன்பே காட்சிகள் லீக் ஆனதால் தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஊழியர் மூலம் படக்காட்சி லீக்கானதால் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகையின் பொது திரையரங்குகளில் வெளியானது. எனவே 50% இருக்கைகளுடன் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என உயர்நீதிமன்றமும், தமிழக அரசும் அறிவித்திருந்தது. மேலும் மாஸ்டர் படத்தை இணையத்தளத்தில் வெளியிட அனுமதியில்லை எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகும் முன்பே காட்சிகள் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தயாரிப்பாளர் லலித்குமார், லீக் ஆன மாஸ்டர் பட காட்சிகளை யாரும் பகிரவேண்டாம் என கோரிக்கை வைத்தார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படக்கட்சிகள் லீக்கானது தொடர்பாக ரூ.25 கோடி கேட்டு தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்த வருடம் ஏப்ரலில் வெளியாக வேண்டிய இப்படம், கொரோனா பிரச்னைகளால் தள்ளிப் போனது. பின்னர் கடந்த நவம்பரில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், பெரிய நட்சத்திரங்களின் படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. பின்னர் பல்வேறு இழுபறிக்கு மத்தியில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 13 ஆம் தேதி திரைப்படம் வெளியானது.