நாகர்கோவில்: விளம்பரத்திற்காக கோடி கோடியாக பணத்தை செலவழிக்கும் ஆட்சியாளர்கள் மழையால் பாதித்த விவசாயிகளின் அழுகுரலை கேட்க தயாராக இல்லை என்று திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பரப்புரையின் 3ம் கட்ட பிரசார பயணம் குமரியில் தொடங்கியது. தொடர்ந்து நாகர்கோவில் நாகராஜா திடலில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி.,ஆட்சியாளர்கள் தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களிடம் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக கூறினார். முதல்வர் பழனிசாமி வெறும் அடிக்கல் நாயகனாக மட்டுமே உள்ளதாக அவர் சாடினார். அதிமுகவால் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்டு உள்ளதாகவும் பணிகள் ஏதும் நடைபெறவில்லை என்றும் கனிமொழி கண்டனம் தெரிவித்தார்.