சென்னை: சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் வி.சாந்தா மறைவுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் தலைவர் Dr.சாந்தா மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அனைத்து தரப்பு மக்களுக்கும் புற்றுநோய்க்கான சிகிச்சை எளிதாக கிடைக்க 50 ஆண்டுகளாக ஒரு இயக்கமாகவே செயல்பட்டவர். அவரால் புற்றுநோயை வென்றவர்கள் ஏராளம். மருத்துவ உலகிற்கு பேரிழப்பு. ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.