மருத்துவர் வி.சாந்தா மறைவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்

ஐதராபாத்: சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் வி.சாந்தா மறைவுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்தார். சென்னை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் நிறுவனத்தலைவர் டாக்டர். வி.சாந்தா அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். புற்றுநோய் நோயாளிகளுக்காக தன் வாழ்நாள் முழுவதும் சேவையாற்றியவர். மருத்துவ சேவையை ஆலயமாக உருவாக்கி ஆலமரமாக வளர்த்தவர். மருத்துவ சேவைக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது பயனாளிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Related Stories: